பதிவு செய்த நாள்
22 டிச2011
00:02
மும்பை: நடப்பு 2011ம் ஆண்டில் இதுவரையிலுமாக, 39 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டை மேற்கொண்டன. இதில், 9 நிறுவன பங்குகளின் விலை மட்டுமே, அவற்றின் வெளியீட்டு விலையை விட அதிகமாக உள்ளது. ஏனைய 30 நிறுவனப்பங்குகளின் விலை, வெளியீட்டு விலையை மிகவும் சரிவடைந்துள்ளது.
நடப்பாண்டில் இதுவரையிலுமாக, நிறுவனங்கள், 14 ஆயிரம் கோடி ரூபாயை பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டிக் கொண்டன.ஆனால், இந்நிறுவன பங்குகளின் விலை தற்போது, 10 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் தான் உள்ளது. ஆக, முதலீட்டாளர்களுக்கு, 4,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.நடப்பாண்டில், பங்கு வெளியீட்டை மேற்கொண்ட பல நிறுவனங்களுள், லவ்வபில் லிங்கிரீஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டின் போது, அதன் பங்குகள் வேண்டி, 30 மடங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்தன.
அதேபோல், முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் வேண்டி, 21 மடங்கிற்கு பங்குகள் வந்தன.ஏனைய பெரும்பாலான நிறுவனங்களின் பங்கு வெளயீட்டிற்கு, இதற்கும் குறைந்த அளவிற்கே ஆதரவு கிடைத்தது. நடப்பாண்டில், பொதுத் துறையில், பவர் பைனான்ஸ் நிறுவனத்தின், பங்கு வெளியீடு மட்டுமே வெளி வந்தது.ஒன்லைப் கேபிடல் அட்வைசஸ் நிறுவனம், பங்கு ஒன்றை, 110 ரூபாயில் வெளியிட்டது. இதன் பங்கின் விலை தற்போது, வெளியீட்டு விலையை விட, அதிகமாக, 225 ரூபாய் என்றளவில் விலை போய் கொண்டுள்ளது.ஆஞ்சநேயா லைப் கேர் நிறுவனப் பங்கின் விலை, வெளியீட்டு விலையான, 234 ரூபாயை விட அதிகமாக, 470 ரூபாயாக உள்ளது.இவைதவிர, பிளக்சிடப் இண்டர்நேஷனல், ருஷில் டெகோர், பிரகாஷ் கன்ஸ்ட்ரோவெல், லவ்வபில் லிங்கரிஸ், இன்வென்சர் குரோத் அண்டு செக்யூரிட்டிஸ், மிட்வேலி எண்டர்டைமென்ட் மற்றும் பிரிஹவுஸ் எஜூகேஷன் அண்டு அசசரிஸ் ஆகிய நிறுவனப் பங்குகளின் விலையும், வெளியீட்டு விலையை விட அதிகமாக உள்ளது.அதேசமயம், முத்தூட் பைனான்ஸ், எல் அண்டு டி பைனான்ஸ் ஹோல்டிங்ஸ், பி.எப்.சி., மற்றும் டாட்டா ஸ்டீல் ஆகிய நிறுவன பங்குகளின் விலை, வெளியீட்டு விலையை விட குறைவாக உள்ளது என, ஆய்வு நிறுவனத்தின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|