மத்திய எண்ணெய் அமைச்சகம் ரூ.43,000 கோடி மானிய கோரிக்கைமத்திய எண்ணெய் அமைச்சகம் ரூ.43,000 கோடி மானிய கோரிக்கை ... சர்வதேச உருக்கு உற்பத்தி 11.60 கோடி டன்னாக உயர்வு சர்வதேச உருக்கு உற்பத்தி 11.60 கோடி டன்னாக உயர்வு ...
ஜி.எஸ்.எம். வாடிக்கையாளர் எண்ணிக்கை 63 கோடியாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2011
00:04

புதுடில்லி: சென்ற நவம்பர் மாதத்தில், ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்திலான மொபைல் சேவையை, 60 லட்சத்து 68 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர். இதையடுத்து, நாட்டின் ஜி.எஸ்.எம். வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 63 கோடியே 20 லட்சமாக அதிகரித்துள்ளது என, இந்திய மொபைல் போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இந்தியாவில், மொபைல் போன் சேவை நிறுவனங்கள் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ.ஆகிய இரண்டு தொழில் தொழில்நுட்பத்தில் சேவையை வழங்கி வருகின்றன. இதில், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப சேவை பெறும் வாடிக்கையாளர் எண்ணிக்கை சிறப்பான அளவில் அதிகரித்து
வருகிறது.
சென்ற அக்டோபர் மாதத்தில், ஜி.எஸ்.எம். வாடிக்கையாளர் எண்ணிக்கை, 62 கோடியே 50 லட்சம் என்றளவில் இருந்தது.அதேசமயம், நடப்பாண்டு பிப்ரவரி மாதத்தில், மொபைல் போன் சேவை நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கூடுதலாக 1 கோடியே 47 லட்சமாக அதிகரித்திருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கை, நவம்பர் மாதத்தை விட, இரண்டு மடங்கிற்கும்அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.நவம்பர் மாதத்தில், அதிக வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டதில், ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஐடியா செல்லுலார் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் மொபைல் சேவையை 20 லட்சத்து 17 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர். இதையடுத்து, இதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 10 கோடியே 30 லட்சமாக உயர்ந்துள்ளது.பார்தி ஏர்டெல் நிறுவனம், 9 லட்Œத்து 60 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களை @Œர்த்துள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 17 @காடி@ய 46 லட்Œமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 28 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வோடபோன் எஸ்ஸார் நிறுவனம், சென்ற நவம்பரில், 9 லட்Œத்து 25 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 14 @காடி@ய 60 லட்Œமாக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில், இந்நிறுவனத்தின் பங்களிப்பு, 23 சதவீதமாக உள்ளது.
ஏர்செல் நிறுவனம், 6 லட்சத்து 74 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 6 கோடியே 10 லட்சமாக அதிகரித்துள்ளது.
அதேசமயம், வீடியோகான் நிறுவனம், சென்ற நவம்பரில், 5 லட்சத்து 88 ஆயிரம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. தற்போது, அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 50 லட்சத்து 40 ஆயிரம் என்றளவில் உள்ளது.இந்தியாவில், ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்திலான மொபைல் போன் சேவையை பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொள்வது கிடையாது. ஏனெனில், பல வாடிக்கையாளர்கள் முழு அளவில், இதனை பயன்படுத்தாததால், இந்நிறுவனங்களுக்கு வருவாய் அதிகரிப்பதில்லை.
மொபைல் போன் சேவையை, வாடிக்கையாளர்கள் முழு அளவில் பயன்படுத்தும் போது தான், இந்நிறுவனங்களுக்கு அதிகளவில் வருவாய் கிடைக்கிறது. அண்மையில், வோடாபோன் நிறுவனம், 60 நாட்களுக்கு பேச்சு, புள்ளி விவரங்கள் மற்றும் குறுந்தகவல் சேவையை, பயன்படுத்தாத வாடிக்கையாளர்களின் தொலைபேசி சேவையை நிறுத்துவதாக அறிவித்தது.
மேலும், மொபைல் போன் சேவையை பயன்படுத்தாததால், இந்நிறுவனங்களுக்கு தொலைபேசி எண் வழங்குவதில் இடர்பாடு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)