பதிவு செய்த நாள்
22 டிச2011
00:06
புதுடில்லி: சென்ற நவம்பர் மாதத்தில், சர்வதேச அளவில் உருக்கு உற்பத்தி, 11.60 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 1.1 சதவீதம் (11.42 கோடி டன்) அதிகமாகும் என, உலக உருக்கு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சென்ற நவம்பர் மாதம், இந்தியா, 60 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 8.9 சதவீதம் (50 லட்சத்து 50 ஆயிரம் டன்) அதிகமாகும்.
நடப்பு காலண்டர் ஆண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரையிலான, 11 மாத காலத்தில், சர்வதேச அளவில், 137 கோடியே 30 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 7.4 சதவீதம் அதிகமாகும்.இதே காலத்தில், இந்தியா, 6 கோடியே 60 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், 6 கோடியே 25 லட்சம் டன்னாக இருந்தது. சென்ற நவம்பர் மாதத்தில், சீனா, 5 கோடி டன் உருக்கு உற்பத்தி செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், மேற்கொள்ளப்பட் உற்பத்தியை விட, 0.2 சதவீதம் குறைவாகும்.
இதே காலத்தில், ஜப்பான் 87 லட்சம் டன் மற்றும் தென் கொரியா, 58 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்துள்ளன.ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஜெர்மனி, 35 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 10 சதவீதம் குறைவாகும்.
இத்தாலி மற்றும் துருக்கி முறையே, 26 லட்சம் டன் மற்றும் 28 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்துள்ளன. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 12.3 சதவீதம் மற்றும் 12.8 சதவீதம் அதிகமாகும்.அமெரிக்கா, 72 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 11.8 சதவீதம் அதிகமாகும்.
சர்வதேச அளவில், உருக்கு நிறுவனங்களின் மொத்த கச்சா உருக்கு உற்பத்தித் திறன், 73.4 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|