டயர் நிறுவனங்களின் லாப வரம்பு பாதிப்பு : டயர் நிறுவனங்களின் லாப வரம்பு பாதிப்பு : ... வர்த்தக விசாவில் 1.78 லட்சம் சீனர்கள் இந்தியாவுக்கு வருகை வர்த்தக விசாவில் 1.78 லட்சம் சீனர்கள் இந்தியாவுக்கு வருகை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
உலக பங்கு சந்தைகளில் முன்னேற்றம்... 'சென்செக்ஸ்' 510 புள்ளிகள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2011
00:07

மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று மிகவும் சிறப்பாக இருந்தது. நேற்று முன்தினம், அமெரிக்க பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்ததையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.இருப்பினும், ஒட்டு மொத்த அளவில் சர்வதேச பங்கு சந்தைகளில், வர்த்தகம் சுணக்கம் அடைவதற்கே வாய்ப்புள்ளது. உலக நிலவரம், கடந்த 2008ம் ஆண்டை விட, மோசமாகவே உள்ளது. எனவே எந்த ஒரு நிலையிலும், வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகலாம் என, பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ்,'இந்தியாவின் எதிர்காலம் வளமாகவே உள்ளது. ஒரு சில பிரச்னைகள் மற்றும் சர்வதேச நிலவரத்தால், இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகி வருகிறது' என தெரிவித்துள்ளது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, நுகர்வோர் சாதனங்கள், மின்சாரம், எண்ணெய்,எரிவாயு, மருந்து, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், நீண்ட நாட்களுக்கு பிறகு அதிகரித்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 510.13 புள்ளிகள் அதிகரித்து, 15,685.21 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக 15,727.31 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,377.04 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளின் விலையும் அதிகரித்திருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'நிப்டி' 148.95 புள்ளிகள் உயர்ந்து, 4,693.15 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 4,707.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,601.95புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)