பதிவு செய்த நாள்
22 டிச2011
10:12
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 193..41 புள்ளிகள் குறைந்து 15495.80 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 59.15 புள்ளிகள் குறைந்து 4634.00 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று மிகவும் சிறப்பாக இருந்தது. நேற்று முன்தினம், அமெரிக்க பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்ததையடுத்து, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.இருப்பினும், ஒட்டு மொத்த அளவில் சர்வதேச பங்கு சந்தைகளில், வர்த்தகம் சுணக்கம் அடைவதற்கே வாய்ப்புள்ளது. உலக நிலவரம், கடந்த 2008ம் ஆண்டை விட, மோசமாகவே உள்ளது. எனவே எந்த ஒரு நிலையிலும், வர்த்தகம் பாதிப்புக்குள்ளாகலாம் என, பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, நுகர்வோர் சாதனங்கள், மின்சாரம், எண்ணெய்,எரிவாயு, மருந்து, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், நீண்ட நாட்களுக்கு பிறகு அதிகரித்து காணப்பட்டது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|