பதிவு செய்த நாள்
22 டிச2011
10:46
கரூர் : கேரள மாநிலத்திற்கு பூக்கள் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதால், கரூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. கரூர் மாவட்டத்தில் லந்தக்கோட்டை, வெள்ளிமணை, மண்மங்கலம், மாயனூர் உள்ளிட்ட இடங்களில் பூக்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. பனிப்பொழிவு அதிகமாக இருப்பதன் காரணத்தினால் முல்லை மற்றும் மல்லிகை பூக்களின் வரத்து கணிசமான அளவு குறைந்துள்ளது. இப்பருவத்தில் பூக்கும் செவ்வந்தி பூக்கள் அதிகமான அளவில் பூத்துள்ளது. முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக, மாநிலம் எங்கும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், உணவு, காய்கறிகள், பால், பூக்கள் உள்ளிட்ட பொருட்கள் கேரளாவிற்கு கொண்டுசெல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, கரூரில் இருந்து பூக்கள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படாததால், பூக்கள் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு, இந்நிலையில், பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் அடைத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளதாக சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|