பதிவு செய்த நாள்
22 டிச2011
14:23
புதுடில்லி: நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் முன்னணி 100 நிறுவனங்கள் செலுத்திய முன்கூட்டிய வரி ரூ.30,763 கோடியாக உள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.31,203 கோடியாக இருந்தது. இந்த நிறுவனங்கள் செலுத்திய வரியில் 1.4 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. வட்டி விகிதங்கள் அதிகரிப்பால் நிறுவனங்களின் விரிவாக்கத் திட்டங்கள் சுணங்கின. இதனால் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி குறைந்து வந்துள்ளது. இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் உற்பத்தி 5.1 சதவீதம் சரிவடைந்தது. இதனால் முன்கூட்டிய வரி வசூல் குறைந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் மூன்றாவது காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் பல்வேறு தரப்பினராலும் எதிர்பார்க்கப்படுகின்றன. இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக குறைந்துள்ளது. அது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் 8.4 சதவீதமாக இருந்தது. நடப்பு நிதி ஆண்டில், ஒட்டுமொத்த அளவில் ரூ.9.32 லட்சம் கோடி வரி வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் நேரடி வரிகள் மூலம் மட்டும் ரூ.5.32 லட்சம் கோடி பெற திட்டமிடப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி வேகம் சரிந்தது, வரி வசூலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு போன்றவற்றால் இந்த இலக்கை எட்டுவது சிரமம் என்று கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|