பதிவு செய்த நாள்
23 டிச2011
01:59
சென்னை:தங்கம் விலை அதிகரித்து வருவதையடுத்து, கிரெடிட் கார்டு வாயிலாக தங்கம் வாங்குவது உயர்ந்து வருகிறது.நடப்பு ஆண்டில், தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்துள்ளது. அண்மையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை, 22 ஆயிரத்தை தாண்டியிருந்தது. டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு வீழ்ச்சி யடைந்துள்ள தாலும், பங்குச் சந்தை சரிவடைந்துள்ளதாலும், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது.
இதனால், சர்வதேச அளவில், தங்கம் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது. இதையொட்டி, கடன் வாங்கியாவது, தங்கத்தில் முதலீடு செய்து வரும் போக்கு காணப்படுகிறது. இதற்கு சான்றாக, நடப்பு ஆண்டில், கிரெடிட் கார்டு வாயி லாக தங்க ஆபரணங்கள் வாங்குவது, 20-40 சதவீதம் அதிகரித்துள்ளதாக, ஆய் வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.கிரெடிட் கார்டுகள் மூலம், குறைந்தபட்சம் 15 ஆயிரம் முதல், அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய்வரை தங்க ஆபரணங்கள் வாங்கப் படுவதாக, நகை விற்பனையாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட தொகைக்கு நகை வாங்குவோர், கண்டிப்பாக வரு மான வரித்துறையின், பான் கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டும் என, நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக வும், கிரெடிட் கார்டு வாயிலாக ஆபரணங்கள் வாங்குவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|