பதிவு செய்த நாள்
23 டிச2011
02:00
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வியாழக்கிழமையன்று அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், பங்கு வியாபாரம் நன்கு இல்லாததால், இந்திய பங்குச் சந்தைகளிலும் முற்பகல் வரை, வர்த்தகம் மிகவும் மந்தமாக இருந்தது. இந்நிலையில், ஐரோப்பிய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சூடுபிடித்ததையடுத்து, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை அதிகரித்தது.
மேலும், உணவுப் பொருள் பணவீக்கம், 1.81 சதவீதமாக குறைந்துள்ளது என்ற செய் தியும், வர்த்தகத்திற்கு வலுச் சேர்த்தது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், தக வல் தொழில்நுட்ப நிறுவனப் பங்குகள் தவிர, வங்கி, மோட்டார் வாகனம், உலோகம், பொறியியல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவ னப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 128.15 புள்ளி கள் அதிகரித்து, 15,813.36 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தி னி டையே இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 15,834.63 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,472.70 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென் செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், 23 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 7 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்"நிப்டி' 40.70 புள்ளிகள் உயர்ந்து, 4,733.85 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே அதிகபட்சமாக, 4,740.60 புள்ளிள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,632.95 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|