பதிவு செய்த நாள்
23 டிச2011
02:03
திருப்பதி:திருப்பதி ஏழுமலை ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் அருளால், அங்கு குவி யும் பக்தர்களின் தலைமுடி கூட, பல கோடி ரூபாய் வருவாய்ஈட்டித் தரும் பொருளாக விளங்குகிறது. பொதுத் துறையை சேர்ந்த மினி ரத்னா அந்தஸ்து பெற்றுள்ள எம்.எஸ். டி.சி நிறுவனம், திருப்பதி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலை முடியை, இணையதளம் வாயிலாக ஏலம் விட்டு, பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது.
திருப்பதி:திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில், நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மொட்டை அடித்து, தலைமுடியை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். நாள்தோறும், 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மூன்று ஷிப்டுகளில்,10 ஆயிரத் திற்கும் அதிகமான பக்தர்களுக்கு மொட்டை அடித்து வருகின்றனர். இவ்வகையில், இக் கோவிலில், ஆண்டிற்கு 471 டன் அளவிற்கு தலைமுடி சேகரிக்கப்பட்டு, பாரம் பரிய முறையில் ஏலம் விடப்படுகிறது.
பல நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்று, தலைமுடியை வாங்கி, சுத்தமாக்கி, தர வாரியாக பிரித்து விற்பனை செய்து வருகின்றன. இந்த தலைமுடியை, விக் உள்ளிட்ட கேச அலங்கார வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் அயல்நாட்டு நிறுவனங்கள், அதிக அளவில் வாங்கி வருகின்றன.இந்நிலையில், இத்துறையில் ஈடுபட்டுள்ள நிறு வனங்கள், கூட்டணி அமைத்துக் கொண்டு, குறைந்த தொகைக்கு தலைமுடியை ஏலத் தில் எடுப்பதாக திருப்பதி தேவஸ்தானம் கருதியது.இத்தகைய செயல்பாட்டை தடுக்கவும், தலைமுடி விற்பனை வாயிலான வருவாயை பெருக்கவும் கோவில் நிர்வாகம் திட்டமிட்டது.
இதையடுத்து, தலைமுடியை மின்னணு முறையில், ஏலம் விடுவது என முடிவு செய்யப்பட்டது.இதற்காக, பொதுத் துறையை சேர்ந்த எம்.எஸ்.டி.சி நிறுவனத்துடன், திருப்பதி-திருமலை தேவஸ்தான நிர்வாகம் ஒப்பந்தம் செய்து கொண்டது. இணைய தளம் வாயிலாக நிலக்கரி, மாங்கனீஸ், இரும்புக் கழிவுகள் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விடும் எம்.எஸ்.டி.சி நிறுவனம், சென்ற அக்டோபர் மாதம், முதன் முறையாக திருப்பதி கோவிலில் சேகரிக்கப்பட்ட தலைமுடியை ஏலம் விட்டது.
இது குறித்து, எம்.எஸ்.டி.சி நிறுவனத்தின் தலைவர் எஸ்.கே.திரிபாதி கூறிய தாவது: இணையதளம் வாயிலாக முதன் முறையாக மேற்கொண்ட முடி ஏலம், பாரம்பரிய ஏல முறையை தவிடு பொடியாக்கி, புதிய அத்தியாயத்தை படைத்து விட்டது. இந்த ஏலத்தில் 2,824 கிலோ தலைமுடி வாயிலாக, 105 கோடி ரூபாய்திரட்ட திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால், வியப்பளிக்கும் வகையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, வருவாய், 27 சதவீதம் அதிகரித்து, 133 கோடி ரூபாய்வசூலானது.
நிறுவனம், இதே முறையில் முன்பேர வர்த்தகத்திலும் தலைமுடியை சேர்ப்பது தொடர்பாக, திருப்பதி - திருமலை தேவஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள் ளது. சென்ற முறை நடைபெற்ற ஏலத்தில், அயல்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்க வில்லை. அடுத்து வரும் ஏலங்களில், இந்நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம்:திருப்பதி மட்டுமின்றி, ஆந்திராவில் உள்ள முக்கிய கோவில்களில் சேகரிக்கப் படும் கேசத்தையும், இணையதளம் வாயிலாக ஏலம் விட முயற்சி மேற் கொண்டுள் ளோம். தமிழகம், கர்நாடகா,கேரளா ஆகிய மாநிலங்களில்,அதிக வருவாய் ஈட்டும் கோவில்களில் திரட்டப்படும் தலைமுடியை ஏலம் விடுவதற்காக, இக் கோவில் களை நிர்வகிக்கும் அறநிலையத் துறையுடன் பேச்சுவார்த்தை நடந்து வரு கிறது. நாட்டில், ஓர் ஆண்டில் தலைமுடி வர்த்தகத்தின் மதிப்பு, 700 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
திருப்பதியில், ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். மேலும் உலர் திராட்சைகள், பழங்கள், உலர்ந்த பழங்கள் உள்ளிட்டவையும் ஏராளமாக வழங்கப்படுகின்றன. இத்தகைய காணிக்கைகளின் மதிப்பு 300 - 400 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.நிறுவனம், இணைய தளம் வாயிலாக வெள்ளி, உலர் திராட்சை ஆகியவற்றையும் ஏலம் விட, திருப்பதி - திருமலை தேவஸ்தானத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|