பதிவு செய்த நாள்
23 டிச2011
02:05
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிவால்,இந்திய உர இறக்கு மதியாளர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது.இந்நிலையில்,சர்வதேச சந்தையில், அதி களவில் உரம் மற்றும் உரத்திற்கான மூலப் பொருட்களை வாங்கும் இந்தியாவின் ஆர்டர்கள் குறைந்ததால், இவற்றின் விலை உலகச் சந்தைகளில் மிகவும் சரிவடைந் துள்ளது. இது, இந்திய உர இறக்குமதியாளர்களுக்கு சாதகமான அம்சமாக அமைந் துள் ளது.
இறக்குமதி செலவு:கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 46 ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது, படிப்படியாக அதிகரித்து 54 ரூபாய்க்கு மேல் உயர்ந்தது. இதனால், இறக்குமதி செலவினம் அதிகரித் தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் குறுக்கீட்டால், ரூபாயின் மதிப்பு தற்போது 52-53 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
இந்திய உர நிறுவனங்கள், வெளிநாடுகளிலிருந்து, அமோனியா மற்றும் பாஸ்பேட் ஆகிய உர மூலப் பொருட்களை மிக அதிகளவில் இறக்குமதி செய்து வருகின்றன. இச்சூழ்நிலையில், ரூபாயின் மதிப்பு சரிவால், இந்நிறுவனங்கள் இவற்றின் இறக்குமதி யை வெகுவாகக் குறைத்துக் கொண்டன. இதையடுத்து, சர்வதேசச் சந்தையில், உர மூலப் பொருட்களின் விலை பன்மடங்கு குறைந்து போயுள்ளதாக தெரியவந்துள்ளது.
யூரியாவிலை:இதற்கு எடுத்துக்காட்டாக,சர்வதேச சந்தையில்,ஒரு டன் அமோனியா வின் விலை 50 டாலர் குறைந்து,அதாவது,625 டாலரிலிருந்து,575 டாலராக குறைந்து போயுள்ளது. இதே போன்று, ஒரு டன் யூரியாவின் விலை,ஒரு மாத காலத்தில், 430- 400 டாலரிலிருந்து, 330-340 டாலராக சரிவடைந்துள்ளது.
நடப்பு 2011ம் ஆண்டின் மத்தியில், சர்வதேச சந்தையில் ஒரு டன் யூரியாவின் விலை, 550-650 டாலர் என்ற அளவில் அதிகரித்து காணப்பட்டது.மேலும், உரத் தயாரிப் பிற்கு,மூலப் பொருட்களான,நைட்ரஜன் மற்றும் பாஸ்பேட் ஆகியவற்றின் விலை யும் சரிவடைந்துள்ளது.இந்தியாவில்,யூரியா அளிப்பு 2.10 கோடி டன் என்ற அள வில் உள்ளது.அதேசமயம், இதற்கான தேவை,2.80 கோடி டன்னாக உள்ளது.ஆக, யூரியா விற்கான பற்றாக்குறை 70 லட்சம் டன்னாக உள்ளது. டை அம்மோனியம் பாஸ்பேட் (டீ.ஏ.பி)விலை (ஒரு டன்) 627 டாலரிலிருந்து, 575 டாலராக குறைந்துள் ளது.
இது குறித்து இந்தியாவின் உர இறக்குமதி நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகை யில்," வரும் 2012ம் ஆண்டின் முதல் காலாண்டு வரை,சர்வதேச சந்தையில் உரம் மற்றும் உர மூலப் பொருட்களின் விலை சரிவடைந்தே காணப்படும்' என்று தெரி வித்தார்.
உர நிறுவனங்கள்:உள்நாட்டில் , உரத் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பல நிறுவனங்கள், ரூபாயின் வெளிமதிப்பு சரிவால் உள்நாட்டிலிருந்தே மூலப் பொருட்களை கொள் முதல் செய்ய துவங்கியுள்ளன. இருப்பினும், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு 52-53 என்ற நிலையில், உள்நாட்டில், ஒரு டன் அமோனியாவின் விலை, 35,000-36,000 ரூபாய் என்ற அளவில் உள்ளது. அதேசமயம், இறக்குமதி செய்யப்படும் ஒரு டன் அமோனியாவின் விலை, 40 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் உள்ளது.சென்ற நவம்பர் மாதத்தில், இப்கோ நிறுவனம், ஒரு டன் டை அமோனியம் பாஸ்பேட்டில், 35 டாலர் மற்றும் நைட்ரஜனில் 25 டாலர் என்ற அளவில், சலுகை விலையில் பெறும் வகையில் ஒப்பந்தம் செய்து கொண்டது.
உள்நாட்டில், உரத் தயாரிப்பிற்கு தேவையான மூலப் பொருட்கள் தேவையான அளவிற்கு கிடைப்பதில்லை. இதையடுத்து, உர நிறுவனங்கள் அவற்றிற்கு தேவை யான பெரும்பாலான மூலப் பொருட்களில் 70 சதவீதத்தை இறக்குமதி செய்து கொள் கின்றன.
அதேசமயம், பொட்டாஷிற்கான தேவை அனைத்தும் இறக்குமதியை சார்ந்தே உள் ளது.டீ.ஏ.பி.70சதவீத அளவிற்கு இறக்குமதி செய்து கொள்ளப்படுகிறது.நடப் பாண்டு மே-ஜூன் மாதங்களில், அதாவது, கரீப் பருவத்தின் தொடக்கத்தில், ஒரு டன் டீ.ஏ.பி.யின் விலை 11 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருந்தது. இது, தற்போது 65 சதவீதம் அதிகரித்து, 18 ஆயிரத்து 500 ரூபாயாக மிகவும் அதிகரித் துள்ளது.
கட்டுப்பாடு:மத்திய அரசு, யூரியா அல்லாத இதர உரங்கள் மீதான விலைக் கட்டுப் பாட்டை விலக்கி கொண்டது. அதன்பிறகு,அதாவது,2010ம் ஆண்டு ஏப்ரல் முதல் இதர உர வகைகளின் விலை பன்மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஒரு டன் 9, 300 ரூபாயாக ஆக இருந்த டீ.ஏ.பி.யின் விலை, தற்போது, 2 மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விலைவாசி நிலவரம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|