பதிவு செய்த நாள்
23 டிச2011
10:55
மும்பை : மொபைல் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் முறை வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருவதால், மொபைல் போன் மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் தொகைக்கான கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி தளர்த்தி உள்ளது. இதுவரை மொபைல் போன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.50,000 வரை மட்டுமே பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி விதித்திருந்தது. அனைத்து வங்கிகளும் தற்போது தங்களின் வாடிக்கையாளர் வசதிக்காக மொபைல் போன் பரிவர்த்தனை சேவையை அறிமுகம் செய்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நாள் ஒன்றிற்கு ரூ.50,000 வரை மட்டுமே மொபைல் மூலம் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி, 2009ம் ஆண்டு விதித்தது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பு நடைமுறைக்கு வந்த சில மாதங்களிலேயே மொபைல் போன் பணம் பரிவர்த்தனை செய்வோரின் அளவு இருமடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|