பதிவு செய்த நாள்
23 டிச2011
16:51
மும்பை : இன்று ஏற்றத்துடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிவை சந்தித்தன. மந்தமான பொருளாதார வளர்ச்சி, சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட பின்னடைவு உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் 75 புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 74.66 புள்ளிகள் சரிந்து 15,738.70 புள்ளிகளாகவும், நிஃப்டி 19.85 புள்ளிகள் சரிந்து 4714 புள்ளிகளாகவும் இருந்தன. வெளிநாட்டு பங்குகளுக்கு இணையாக முதலீடுகளை பெருக்கும் நோக்கம் புத்தாண்டில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சந்தை நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7 சதவீதம் வரை உயரும் வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளதால் இனி வரும் காலங்களில் இந்திய பங்குச் சந்தைகளின் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|