பதிவு செய்த நாள்
24 டிச2011
02:34
அகமதாபாத்:நாட்டின் பால் உற்பத்தி, சென்ற 2010-11ம் நிதியாண்டில், 12.10 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, சர்வதேச பால் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், 17 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், கூட்டுறவு பண்ணைகள் மூலம், 96 லட்சம் டன் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், 1 சதவீதம் அதிகமாகும்.சென்ற நிதியாண்டில், கூட்டுறவு பண்ணைகளின் திரவ வடிவிலான பால் விற்பனை, இதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும், 4 சதவீதம் உயர்ந்து 82 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களால், கிராமப்புற மக்களின் வருவாய் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாக, பாலுக்கான தேவைப்பாடு சிறப்பான அள வில் உயர்ந்து வருகிறது. புதிய தொழில்நுட்ப திட்டங்கள், தரமான தீவனங்கள் மற்றும் ஆற்றல்மிக்க மரபணு முறை களை கையாளுதல் போன்றவற்றின் மூலம், உள்நாட்டில் வளர்ந்து வரும் பாலுக்கான தேவையை எதிர்கொள்ள முடியும் என, தேசிய பால் வளர்ச்சி கழகத்தின் தலைவர் அம்ரீதா பட்டேல் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|