பதிவு செய்த நாள்
26 டிச2011
13:45
பொங்கல் பண்டிகைக்காக, மண் அடுப்புகள் மானாமதுரையில் இருந்து விற்பனைக்காக சென்னையில் குவிந்துள்ளன.சமையல் எரிவாயு மற்றும் மின்சார அடுப்புகள் பயன்பாட்டில் வந்தாலும் மண் அடுப்புகளுக்கு மவுசு குறையவில்லை. சென்னைவாசிகள் எரிவாயு அடுப்பில் ஆண்டு முழுவதும் சமைத்தாலும், பொங்கல் பண்டிகையை கொண்டாட மண் அடுப்பை பயன்படுத்தி, மண் பானையில் பொங்கல் வைப்பதை கடைபிடிக்கின்றனர்.இந்த வழக்கத்தால், ஆண்டு தோறும் மண் அடுப்புகள் சென்னைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த ஆண்டு மானாமதுரை மேலப்பசிலை கிராமத்திலிருந்து 14 டன் மண் அடுப்புகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இதன் முன்னோட்டமாக, விதவிதமான தினுசுகளில் மண்அடுப்புகள் வியாசர்பாடிக்கு விற்பனைக்கு வந்துள்ளன. இங்கிருந்து சில்லரை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். மொத்த விலையில் 30 முதல் 35 ருபாய் வரை விற்கப்படும் மண் அடுப்பு, சில்லரை விலையில் 60 ருபாய் வரை விற்கப்படுகிறது.மண் அடுப்பு வியாபாரி திருமலை கூறியதாவது:சமையல் எரிவாயு மற்றும் மின்சார அடுப்பில் சமைத்தால் வராத சுவை மண் சட்டியில் செய்தால் வரும். இதில் சமைத்தால் நோய் கூட எளிதில் நம்மை அண்டாது.இங்குள்ள சில நட்சத்திர ஓட்டல்களில் கூட புதுமை என்ற பெயரில் மண் பாத்திரங்களில் சமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பாரம்பரியமும் சுவையும் கொண்டதால் தான் இன்னும் எங்கள் பிழைப்பு நடந்து கொண்டிருக்கிறது.இவ்வாறு திருமலை கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|