மேலும் 200 புதிய மருத்துவமனை: அப்பல்லோ திட்டம்மேலும் 200 புதிய மருத்துவமனை: அப்பல்லோ திட்டம் ... பிரின்ஸ் ஜுவல்லரிபிளாட்டினம், வைர நகை கண்காட்சி பிரின்ஸ் ஜுவல்லரிபிளாட்டினம், வைர நகை கண்காட்சி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கூட்டுறவு வங்கி சேமிப்பு கணக்கிற்கு கூடுதல் வட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2011
01:52

மும்பை:மத்திய, மாநில கூட்டுறவு வங்கிகளில், சேமிப்பு கணக்கிற்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள குறைந்தபட்ச வட்டிக்கான உச்ச வரம்பை, ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது. இதனால், இவ்வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக வட்டி கிடைக்கும்.
இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:மத்திய, மாநில கூட்டுறவு வங்கிகள், 1 லட்ச ரூபாய் வரையிலான சேமிப்பு கணக்கிற்கு, அதில் எந்த அளவிற்கு தொகை இருந்தாலும், ஒரே சீரான வட்டி வழங்க வேண்டும். 1 லட்சரூபாய்க்கு மேற்பட்ட டெபாசிட்டுகளுக்கு,வங்கிகள் விருப்பமான வட்டியை வழங்கலாம். எனி னும், இந்த வட்டி விகிதமும், டெபாசிட் தாரர்களிடையே பாரபட்சமின்றி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் உத்தரவால், மத்திய, மாநில கூட்டுறவு வங்கிகள், அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில், கூடுதல் வட்டி வழங்கும் என்று தெரிகிறது. இது, இத்துறையில் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத் துவதோடு, முதலீட்டாளர் களுக்கும் கூடுதல் வருவாயை வழங்கும்.ரிசர்வ் வங்கி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் சேமிப்பு கணக்கிற்கான குறைந்தபட்ச வட்டியை, 3.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக உயர்த்தியது.
மேலும்,1 லட்ச ரூபாய் வரையிலான சேமிப்பு கணக்கிற்கு ஒரே சீரான வட்டியும், அதற்கு மேற்பட்ட தொகைக்கு விருப்பமான வட்டியை நிர்ணயித்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தது.இதையடுத்து,யெஸ் பேங்க், சேமிப்பு கணக்கிற்கான வட்டியை, 6 சதவீதமாக உயர்த்தி, தற்போது,7 சதவீதமாக அதிகரித்துள்ளது.கோட்டக் மகிந்திரா வங்கி, சேமிப்பு கணக்கிற்கான வட்டியை, 6 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மேலும் சில வங்கிகளும் வரும் ஆண்டு தொடக்கத்தில் சேமிப்பு கணக்கிற்கான வட்டியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)