பதிவு செய்த நாள்
29 டிச2011
02:28
புதுடில்லி:நாட்டின் பங்கு வர்த்தகம், புதனன்றும் சுணக்கமாகவே இருந்தது. இதர, ஆசிய பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சரிவடைந்தது.ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சற்று ஏற்றம் காணப்பட்டது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உருக்கு, வங்கி, மோட்டார், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், மின்சாரம், மருந்து, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 146.10 புள்ளிகள் சரிவடைந்து, 15,727.85 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 15,887.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,666.46 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 18 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 12 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும் இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 44.70 புள்ளிகள் குறைந்து, 4,705.80 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,756.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,685.65புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|