பதிவு செய்த நாள்
29 டிச2011
02:30
புதுடில்லி:நிலக்கரி மற்றும் இரும்புத்தாது உற்பத்தி குறைந்துள்ளதையடுத்து, நாட்டின் கனிமங்கள் உற்பத்தி, சென்ற அக்டோபர் மாதத்தில், 14 ஆயிரத்து 555 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 14 ஆயிரத்து 572 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது.
மொத்த கனிமங்கள் உற்பத்தியின் மதிப்பில், கச்சா எண்ணெய் மதிப்பு, 5,427 கோடி யிலிருந்து, 5,806 கோடி ரூபாயாக சிறப்பான அளவில் உயர்ந்துள்ளது.ஆண்டின் அடிப் படையில், சென்ற அக்டோபர் மாதத்தில், இயற்கை எரிவாயு, சுண்ணாம்பு கல் ஆகியவற்றின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இருப்பினும்,மின்சாரம் மற்றும் உருக்கு துறைகளுக்கு அடிப் படை தேவையான, நிலக்கரி மற்றும் இரும்புத் தாது உற்பத்தி குறைந்ததால்இத்துறைகளின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலக்கரி மற்றும் இரும்புத் தாது உற்பத்தி மதிப்பு முறையே 3,784 கோடி மற்றும் 2,321 கோடி ரூபாயாக உள்ளது. இதன் உற்பத்தி கடந்த ஆண்டு இதே மாதத்தில் முறையே, 4,051 கோடி மற்றும் 2,602 கோடி ரூபாய் என்ற அளவில் மிகவும் உயர்ந்து காணப்பட்டது. இதே காலத்தில், நிலக்கரி உற்பத்தி அளவின் அடிப்படையில், 439 லட்சம் டன் னிலிருந்து, 400 லட்சம் டன்னாகவும், இரும்புத் தாது உற்பத்தி 152 லட்சம் டன்னிலிருந்து, 105 லட்சம் டன்னாகவும் குறைந்துள்ளது.
சிறப்பு வகை கனிம உற்பத்தியின் கீழ், சென்ற அக்டோபரில் வைரங்களின் உற்பத்தி 1,481 காரட்களாக மிகவும் அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே மாதத்தில் 35 காரட்கள் என்ற அளவில் மிகக் குறைந்து காணப்பட்டது.இதே காலத்தில், தங்கம் உற்பத்தி 194 கிலோவிலிருந்து, 104 கிலோவாக சரிவடைந்துள்ளது.
சென்ற 2010-11ம் நிதியாண்டில், நாட்டின் கனிமங்களின் மொத்த உற்பத்தி மதிப்பு (அணு உற்பத்தி சார்ந்த தாதுப் பொருட்கள் நீங்கலாக) 2 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், 11.83 சதவீதம் அதிக மாகும்.நம் நாடு, 4 எரிபொருள்கள், 10 உலோகங்கள், 47 உலோகம் சாராத தாதுப் பொருள்கள், 3 அணு சார்ந்த தாதுப் பொருட்கள் மற்றும் 23 சிறிய வகை தாதுப் பொருட்கள் உள்ளிட்ட 87 வகையான கனிமங்களை உற்பத்தி செய்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|