கனிமங்கள் உற்பத்தி ரூ.14,555 கோடியாக சரிவுகனிமங்கள் உற்பத்தி ரூ.14,555 கோடியாக சரிவு ... பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில் பெரும் பின்னடைவு பொறியியல் சாதனங்கள் ஏற்றுமதியில் பெரும் பின்னடைவு ...
மும்பைக்கு பறக்கும் சேலம் செங்கரும்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2011
02:33

நாமக்கல்:'பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விற்பனைக்கு வந்துள்ள கரும்பின் விலை, கடந்த ஆண்டை விட, இரு மடங்கு உயர்ந்துள்ளது. உற்பத்தி செய்யப்படும் கரும்பில் பெரும்பகுதி, மும்பைக்கு அனுப்பப்படுவதே, விலையேற்றத்துக்கு முக்கிய காரணம்' என, கரும்பு வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் ஆண்டுதோறும் ஜனவரியில் செங்கரும்பு நடவு நடைபெற்று நவம்பர், டிசம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படும். இதன்படி, தற்போது செங்கரும்பு, உள்ளூர் சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
செங்கரும்பு ஒன்று, 25 ரூபாய் வீதம், ஒரு ஜோடி கரும்பு, 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு, ஒரு ஜோடி கரும்பு, 25 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது, விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து சேலம் மாவட்டம் வைகுந்தத்தை சேர்ந்த கரும்பு வியாபாரிகள் ராஜமாணிக்கம், பழனி வேல் முருகன் ஆகியோர் கூறியதாவது:இவ்வாண்டு, செங்கரும்பு சாகுபடியை விவசாயிகள் வெகுவாக குறைத்துள்ளனர். அதனால், செங்கரும்பின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு, 300 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்படுகிறது.
இது, கடந்த ஆண்டை விட, இரு மடங்கு அதிகமாகும். எனவே, அவற்றை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகள், வண்டி வாடகை ஆட்கள் கூலி உள்ளிட்டவை சேர்த்து ஒரு ஜோடி கரும்பை, 50 ரூபாய் வீதம் விற்பனை செய்கின்றனர்.
ங்கல் பண்டிகை நெருங்கும் போது, கரும்பின் விலை மேலும் அதிகரிக்கும். நாமக்கல் மாவட்டத்தில் செங்கரும்பு சாகுபடி இல்லாததால், சேலத்தில் இருந்து செங்கரும்பு வாங்கி வந்து விற்பனை செய்யப்படுகிறது.தவிர, சேலம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கரும்புகள், நேரடியாக மும்பைக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
அங்கு கொண்டு செல்லப்படும் கரும்பின் மேல் தோல் உறிக்கப்பட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாக்கெட்டில் அடைத்து வைத்து விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கரும்பு, 150 ரூபாய் வரை விற்பனையாகிறது.எனவே, அங்கிருந்து வரும் வியாபாரிகள்,விவசாயிகள் கேட்ட தொகையை கொடுக்கின்றனர். அதனால் அவர்களுக்கே விவசாயிகள் கரும்பை வழங்குகின்றனர். இதனால், உள்ளூர் வியாபாரிகளுக்கு கரும்பு கிடைப்பதில்லை. கரும்பு வரத்து குறைந்ததே இதற்குக் காரணம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)