பதிவு செய்த நாள்
29 டிச2011
09:34
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் நான்காம் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கிய நேரத்தில்(9.08 மணியளவில்), மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 65.93 புள்ளிகள் குறைந்து 15661.92 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 24.65 புள்ளிகள் குறைந்து 4681.15 புள்ளிகளோடு காணப் பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், புதனன்றும் சுணக்கமாகவே இருந்தது. இதர, ஆசிய பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் சரிவடைந்தது.ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சற்று ஏற்றம் காணப்பட்டது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், உருக்கு, வங்கி, மோட்டார், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. இருப்பினும், மின்சாரம், மருந்து, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|