பதிவு செய்த நாள்
30 டிச2011
00:48
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், தொடர்ந்து மூன்றாவது நாளாக வியாழனன்றும் மோசமாகவே இருந்தது. இத்தாலி குறித்த காலத்தில் பங்கு வெளியீடு மேற்கொள்ளும் என வெளியான செய்தியால், ஐரோப்பிய பங்குச் சந்தை நன்கு இருந்தது. இதர ஆசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.இந்திய பங்குச் சந்தையில், நேற்று நடைபெற்ற வர்த்தகத்தில், வங்கி, உருக்கு, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை இருந்தது. மோட்டார் வாகனம், பொறியியல், ரியல் எஸ்டேட், தொலைத்தொடர்பு உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவன பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 183.92 புள்ளிகள் சரிவடைந்து, 15,543.93 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 15,724.60 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,515.44 புள்ளிகள் வரையிலும் சென்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 24 நிறுவன பங்குகளின் விலை சரிவடைந்தும், 6 நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 59.55 புள்ளிகள் குறைந்து, 4,646.25 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,701.80 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,639.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|