பதிவு செய்த நாள்
30 டிச2011
09:39
சென்னை : புத்தாண்டு தினத்தில், 200 கோடி ரூபாய் சரக்கு விற்பனை செய்ய, டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, மது வகைகள் கடைகளுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நாட்களான, டிச., 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்களில் மட்டும், தமிழகத்தில் டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகள் மூலம், 121.07 கோடி ரூபாய்க்கு மதுவகைகள் விற்பனை ஆகியுள்ளது. இந்த இரண்டு நாட்களில், இந்திய தயாரிப்பிலான அயல்நாட்டு மதுவகைகள், 3.06 லட்சம் பெட்டிகளும், 1.49 லட்சம் பெட்டிகள் பீர் வகைகளும் விற்பனை ஆகியுள்ளன.
ரூ.200 கோடி இலக்கு :
வரும் 2012ம் புத்தாண்டு, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டிச., 31 மற்றும் ஜன., 1 என, இரண்டு நாட்களிலும், 200 கோடி ரூபாய்க்கு மது வகைகளை விற்பனை செய்ய, டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, 41 கிடங்குகளிலிருந்தும், சில்லரை விற்பனைக் கடைகளுக்கு சரக்குகள் கொண்டு செல்லும் பணி முழுவீச்சில் நடந்து வருவதாக, டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|