பதிவு செய்த நாள்
02 ஜன2012
10:40
புதுடில்லி : வேலை தேடுவோருக்கு இந்த ஆண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும். புதிதாக ஐந்து லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியுள்ளதாவது: ஒட்டு மொத்த பொருளாதார சூழ்நிலை மோசமாக இருந்ததாலும், நிலையற்றதன்மை நிலவியதாலும், இந்திய வேலை வாய்ப்புச் சந்தையில், கடந்த ஆண்டில், சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும், அதிலிருந்து மீண்டு, சந்தை பலமானது. கம்பெனிகளும் எச்சரிக்கையான அணுகுமுறையைப் பின்பற்றியதே அதற்கு காரணம்.
அதனால், புத்தாண்டிலும் வேலை வாய்ப்புகள் உருவாவது தொடரும். 2012ம் ஆண்டில் நிறுவனங்கள், புதிதாக ஐந்து லட்சம் ஊழியர்களை, நிறுவனங்கள் வேலைக்கு சேர்க்கலாம். அதாவது, அனைத்துத் துறைகளிலும் ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து இந்த வேலை வாய்ப்பு உருவாகும். ஏற்கனவே பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வும் இருக்கும். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைத் துறைகளில் மட்டும் இந்த ஆண்டில் மூன்று லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|