பதிவு செய்த நாள்
03 ஜன2012
00:04
மும்பை: சென்ற நவம்பரில், முன்னுரிமை துறைக்கு வழங்கிய கடன், 9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண், வீட்டு வசதி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் வங்கிகள் தாராளமாக கடன் வழங்கி வருகின்றன.நடப்பு நிதியாண்டின் சென்ற நவம்பர் மாதத்தில், இத்துறைக்கு, 12 லட்சத்து 53 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன் வழங்கப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் வழங்கப்பட்ட கடனை விட, 9 சதவீதம் (11 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகமாகும்.முன்னுரிமை துறைக்கான மொத்த கடனில், வேளாண் துறைக்கு, 4.41 லட்சம் கோடி ரூபாயும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு 4.73 லட்சம் கோடி ரூபாயும், வீட்டு வசதிக்கு 2.36 லட்சம் கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|