பதிவு செய்த நாள்
03 ஜன2012
00:06
புதுடில்லி: சென்ற நவம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 2,230 கோடி டாலராக (1 லட்சத்து 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 3.87 சதவீதம் அதிகம் என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதே மாதங்களில், நாட்டின் இறக்குமதி, 24.55 சதவீதம் உயர்ந்து, 3,590 கோடி டாலராக (1 லட்சத்து 74 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது. நாட்டின் ஏற்றுமதியை காட்டிலும், இறக்குமதி அதிகரித்துள்ளதை அடுத்து, வர்த்தகப் பற்றாக்குறை, 1,360 கோடி டாலராக (68 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது.
மொத்த இறக்குமதியில், கச்சா எண்ணெய் உள்ளிட் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதி, 1,030 கோடி டாலர் (51 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) மதிப்பிற்கு இருந்தது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, 19 ஆயிரத்து 270 கோடி டாலராக (9 லட்சத்து 63 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 33.21 சதவீதம் அதிகமாகும்.இதே காலத்தில், இறக்குமதி, 30.2 சதவீதம் அதிகரித்து, 30 ஆயிரத்து 950 கோடி டாலராக (15 லட்சத்து 47 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. ஆக, எட்டு மாத காலத்தில், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 11 ஆயிரத்து 680 கோடி டாலராக (5 லட்சத்து 84 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.
நடப்பாண்டு ஜூலை மாதத்தில், ஏற்றுமதி, 2,670 கோடி டாலராக அதிகரித்து காணப்பட்டது. அதன் பிறகு, ஏற்றுமதியில் சரிவு நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சென்ற நவம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 2,230 கோடி டாலராக (1 லட்சத்து 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) குறைந்துள்ளது.கம்ப்யூட்டர் மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, கடந்த மாதம், நாட்டின் ஏற்றுமதி குறித்த கணக்கீட்டு புள்ளிவிவரத்தில், 900 கோடி டாலர் கூடுதலாக மதிப்பிடப்பட்டதாக, மத்திய அர” தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|