கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை அதிகரிப்புகடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை ... ... கொள்முதல் விலை அறிவிக்காமல் இழுபறி : தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் அதிருப்தி கொள்முதல் விலை அறிவிக்காமல் இழுபறி : தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் ... ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
பெட்ரோல் விலை உயர்வு இப்போதைக்கு இல்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2012
09:13

புதுடில்லி: பெட்ரோல் விலையை உயர்த்தும் எண்ணெய் நிறுவனங்களின் திட்டத்துக்கு, மத்திய அரசிடமிருந்து அரசியல் ரீதியான ஒப்புதல் கிடைக்காததால், இன்னும் இரண்டு வாரங்களுக்கு பெட்ரோல் விலை உயர்த்தப்படாது என, தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப, உள்நாட்டில் பெட்ரோல் விலையில் மாற்றம் செய்யும் அதிகாரம், எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒவ்வொரு மாதமும், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன. தற்போது கச்சா எண்ணெயின் விலை அதிகரித்திருப்பதால், இந்த மாதம் 1ம் தேதியில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு இரண்டு ரூபாய் வரை அதிகரிக்கப்படும் என, தகவல்கள் வெளியாயின. ஆனாலும், இரண்டு நாட்கள் கடந்த பின்னும் அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதுகுறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது: உ.பி., உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்கள் நடப்பதால், விலை உயர்வை அறிவிப்பதில் பிரச்னை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், கடந்த முறை விலை உயர்வு அறிவிக்கப்பட்டபோது, பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
காங்கிரசின் கூட்டணி கட்சியான திரிணமுல் காங்கிரசும் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சமீபத்தில் ராஜ்யசபாவில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது, அதில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என, திரிணமுல் காங்., கூறியது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மீது, திரிணமுல் கடும் அதிருப்தியில் உள்ளது. இந்த சூழ்நிலையில், பெட்ரோல் விலை உயர்வை அறிவித்தால், திரிணமுல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டும் என, அரசு கருதுகிறது. மேலும், விலை உயர்வால், தேர்தலில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் காங்கிரஸ் அச்சப்படுகிறது. இதனால், எண்ணெய் நிறுவனங்களின் விலை உயர்வுக்கு, அரசியல் ரீதியான ஒப்புதல் கிடைக்கவில்லை. எனவே, இன்னும் இரண்டு வாரங்களுக்கு பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. இவ்வாறு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)