கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை அதிகரிப்புகடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் முன்னணி நிறுவனங்களின் வாகன விற்பனை ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ. 152 உயர்வு   தங்கம் விலை சவரனுக்கு ரூ. 152 உயர்வு ...
கொள்முதல் விலை அறிவிக்காமல் இழுபறி : தமிழகத்தில் கரும்பு விவசாயிகள் அதிருப்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2012
10:06

தமிழகத்தில், நடப்பாண்டுக்கான கரும்பு கொள்முதல் விலை இன்னமும் அறிவிக்காததால், விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர். தமிழகத்தில், ஆறு லட்சத்துக்கும் அதிகமான கரும்பு விவசாயிகள் உள்ளனர். நவம்பர் மாதம் துவங்கி, ஆறு மாதங்கள் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்படும் கரும்புகள் அறுவடை செய்யப்படுகின்றன. கூட்டுறவு, தனியார் என, 45 சர்க்கரை ஆலைகள் தமிழகத்தில் செயல்படுகின்றன. குறைந்தபட்ச கொள்முதல் விலையை ஆண்டுதோறும் அரசு அறிவிக்கிறது.
கடந்தாண்டு நிலவரப்படி டன்னுக்கு, 1,900 ரூபாய் கொள்முதல் விலையாக உள்ளது; அதை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், வயலில் கரும்பை அறுவடை செய்து, அதற்கு ஏக்கருக்கு, 400 முதல், 700 ரூபாய் வரை வெட்டுக்கூலியாகப் பிடித்துக் கொண்டு தொகையை ஆலைகள் வழங்குகின்றன. வெட்டுக்கூலி பிடிக்காமல் முழு கொள்முதல் விலையை வழங்கும் முறையையும் கொண்டு வர, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்தாண்டுக்கான கொள்முதல் விலை இதுவரையிலும் அறிவிக்கப்படாதது, விவசாயிகளை மேலும் வேதனையடைய செய்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது: இந்தாண்டு இன்னமும் விலை நிர்ணயிக்கவில்லை. பழைய விலைக்கே கரும்பு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர். மேலும், ஆலை வாயில் விலையை நிர்ணயிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோரிக்கையை விரைவில் நிறைவேற்றாத பட்சத்தில், போராட்டத்தில் இறங்கவும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)