பதிவு செய்த நாள்
05 ஜன2012
01:33
புதுடில்லி:கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனம், 5,000 ஊழியர்களின் ஊதியத்தை குறைக்க உள்ளதாக,தகவல் வெளியாகியுள்ளது.ஏர் இந்தியா நிறுவனம், 43 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வருகிறது. இந்நிறுவனத்தின், 33 ஆயிரம் பணியாளர்களுக்கு,கடந்த மூன்று மாதங்களாக,ஊதியம் வழங்கப்பட வில்லை.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தை மறு சீரமைப்பது தொடர்பாக, ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி தர்மாதி காரி தலைமையில் குழு ஒன்று கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது.இக்குழு, ஏர்இந்தியா நிறுவனத்தின் பல்வேறு செயல்பாடுகள் குறித்தும்,அதன் செலவினங்களை குறைப்பது தொடர்பாகவும் பல்வேறு திட்டங்களை வகுத் துள்ளது. இத்திட்டங்கள் அடங்கிய பரிந்துரையை இக்குழு, இம்மாத இறுதியில், மத்திய அரசிடம் அளிக்க உள்ளது.
இந்த அறிக்கையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட 15 சதவீதம் பேரின் ஊதிய த்தை குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதிக்கப் படுவர். எனினும் 85 சதவீத பணியாளர்களின் ஊதியம் குறைக்கப்படமாட்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|