பதிவு செய்த நாள்
05 ஜன2012
01:34
மும்பை:இரண்டு நாட்கள் நன்கு இருந்த நாட்டின் பங்கு வர்த்தகம், புதனன்று மோசமாக காணப்பட்டது. அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளின் பொருளாதாரம், எதிர்பார்த்ததை விட வளர்ச்சி காணும் என்ற செய்தியால், ஆசிய பங்குச் சந்தைகளின் வர்த்தகம் ஏற்றத்துடன் துவங்கியது. எனினும், இந்திய பங்குச் சந்தையின் வர்த்தகம் சரிவுடன் துவங்கி, அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், வங்கி, மருந்து, உலோகம் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்கு களுக்கு அதிக வரவேற்பு இருந்தது. மோட்டார் வாகனம், உருக்கு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 56.72 புள்ளிகள் குறைந்து, 15,882.64 புள்ளி களில் நிலைபெற்றது.வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக,16,004.69 புள்ளி கள் வரையிலும், குறைந்தபட்சமாக,15,823.32 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உத வும், 30 நிறுவனங்களுள்,18 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும், 12 நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தும் காணப் பட்டது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 15.65 புள்ளிகள் சரிவடைந்து, 4,749.65 புள்ளிகளில் நிலை கொண் டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,782.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,728.85 புள்ளி கள் வரையிலும் சென்றது
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|