பதிவு செய்த நாள்
05 ஜன2012
01:35
புதுடில்லி:பரஸ்பர நிதி நிறுவனங்கள், நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, சென்ற 2011ம் ஆண்டில் 16 ஆயிரம் கோடி ரூபாய் வீழ்ச்சி கண்டுள்ளது.இது குறித்து, இந்திய பரஸ்பர நிதியங்கள் கூட்டமைப்பு (ஆம்பி) வெளியிட்டுள்ள அறிக் கையின் விவரம்:
சென்ற ஆண்டு, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 7 லட்சத்து 3 ஆயிரத்து 680 கோடி ரூபாயாக இருந்தது. இது, சென்ற ஆண்டு, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 6 லட்சத்து 87 ஆயிரத்து 640 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. ஆக, சென்ற ஆண்டு இந்நிறுவனங்கள் பல்வேறு பரஸ்பர நிதித் திட்டங்களின் கீழ் நிர்வகித்து வரும் சொத்து மதிப்பில் 16 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள் ளது.
இதே காலத்தில், இத்துறையில், முதல் ஐந்து இடங்களில் உள்ள எச்.டீ.எப்.சி மியூச்சுவல் பண்டு (எச்.டீ.எப்.சி.எம்.எப்), ரிலையன்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல், பிர்லா சன்லைப் மற்றும் யூ.டி.ஐ. மியூச்சுவல் பண்டு ஆகியவை நிர்வ கிக்கும் சொத்து மதிப்பு, சராசரியாக 31 ஆயிரத்து 741 கோடி ரூபாய் குறைந்து, 3 லட்சத்து 60 ஆயிரத்து 733 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.
எனினும், சென்ற ஆண்டில், பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில், எச்.டீ.எப்.சி மியூச்சுவல் பண்டு நிறுவனம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இத்துறையில், ஐந்து நிறுவனங்கள் முன்ன ணியில் உள்ளன. இவற்றில் எச்.டீ.எப்.சி.எம்.எப்., நிர்வகிக்கும் சொத்து மதிப்பு மட்டும், சென்ற ஆண்டு உயர்ந் துள்ளது.
சென்ற ஆண்டு, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுடன், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டை ஒப்பிடும் போது, இந்நிறுவனம் நிர்வகிக்கும் நிகர சொத்து மதிப்பு, 2,455 கோடி ரூபாய் அதிகரித்து 88 ஆயிரத்து 737 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதே காலத்தில், ரிலையன்ஸ் மியூச்சுவல் பண்டு நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 17 ஆயிரத்து 417 கோடி ரூபாய் குறைந்து 84 ஆயிரத்து 300 கோடி ரூபாயாகவும், ஐ.சி.ஐ.சி.ஐ புருடென்ஷியல் மியூச்சுவல் பண்டு நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 4,080 கோடி குறைந்து 69 ஆயிரத்து 472 கோடி ரூபாயாகவும் சரிவடைந்துள்ளது.
பிர்லா சன்லைப் மியூச்சுவல் பண்டு நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 3,327 கோடி ரூபாய் குறைந்து 60 ஆயிரத்து 406 கோடி ரூபாயாகவும், யூ.டி.ஐ. மியூச்சுவல் பண்டு நிறுவனம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு 9,371 கோடி குறைந்து 57 ஆயிரத்து 817 கோடி ரூபாயாகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.பரஸ்பர நிதி நிறுவனங்கள், பல்வேறு திட்டங்கள் மூலம் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து வருகின்றன. சென்ற ஆண்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, அவற்றில் முதலீடு செய்த பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு குறைந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|