பதிவு செய்த நாள்
05 ஜன2012
01:36
புதுடில்லி:நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் டிச., 20ம் தேதி வரையிலான காலத்தில், இந்திய ரயில்வேயின் வருவாய், 71 ஆயிரத்து 613 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத் தை விட, 10.20 சதவீதம் (64 ஆயிரத்து 982 கோடி ரூபாய்) அதிகமாகும்.
இதே காலத்தில், சரக்கு போக்குவரத்து வாயிலான வருவாய், 10.16 சதவீதம் அதிகரித்து, 43 ஆயிரத்து 258 கோடி யிலிருந்து,47 ஆயிரத்து 653 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பயணிகள் போக்குவரத்து பிரிவின் வருவாய், 9.45 சதவீதம் வளர்ச்சியடைந்து,18 ஆயிரத்து 502 கோடியிலிருந்து, 20 ஆயிரத்து 250 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மதிப்பீட்டு காலத்தில், முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகள் எண்ணிக்கை, 5.20 சதவீதம் வளர்ச்சி யடைந்து, 569 கோடியிலிருந்து, 598 கோடியாக அதிகரித்துள்ளது.
சென்ற ஆண்டில், ஏப்ரல் முதல், நவம்பர் வரையில், இந்திய ரயில்வே, 61.80 கோடி டன் சரக்குகளை கையாண் டுள் ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில், கையாண்டதை விட, 4.14 சதவீதம் (59.34 கோடி டன்) அதிகமாகும். ஆக, மதிப்பீட்டு காலத்தில், 2.46 கோடி டன் சரக்கு அதிகமாக கையாளப்பட்டுள்ளது.சென்ற 2011ம் காலண்டர் ஆண்டில் ஜனவரி முதல் நவம்பர் வரையிலுமாக, இந்திய ரயில்வேக்கு இரும்பு கழிவுகள் விற்பனை வாயிலாக, 3,749 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|