ரயில்வே வருவாய் 10 சதவீதம் வளர்ச்சிரயில்வே வருவாய் 10 சதவீதம் வளர்ச்சி ... வருமான வரி பிடித்தம் தமிழகம் 4வது இடம் வருமான வரி பிடித்தம் தமிழகம் 4வது இடம் ...
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் உணவுப் பொருள் இறக்குமதி நிறுவனங்கள் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2012
01:41

புதுடில்லி:டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு வீழ்ச்சியால், பருப்பு வகைகள், தாவர எண்ணெய், பாதாம், ஆப்பிள் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி செய்வோர் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், அரிசி, சோளம் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்வோர் அதிக லாப மீட்டி வருவதாக அமெரிக்க வேளாண் (யு.எஸ்.டீ.ஏ) துறை தெரிவித்துள்ளது.
நீண்ட கால ஒப்பந்தம்: கடந்த நான்கு மாதங்களில், டாலருக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு 20 சதவீத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது.சென்ற 2011ல், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு 53.10 ரூபாய் என்ற அளவிற்கு சரிவடைந்து போனது. குறிப்பாக, முன் எப்போதும் இல்லாத அளவாக சென்ற டிசம்பர் 15ம் தேதியன்று, டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு 18.79 சதவீதம் குறைந்து, 54.30 ரூபாயாக வீழ்ச்சி கண்டது.
டாலர் மதிப்பு உயர்ந்து, ரூபாயின் வெளி மதிப்பு வீழ்ச்சியடைந்தால், குறிப்பாக, இறக்குமதியை சார்ந்துள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. ஏனெனில், இவை, பெரிய நிறுவ னங்களைப் போல், அன்னியச் செலாவணி மதிப்பு மாறினாலும் பாதிக்காதபடி, நீண்ட கால அடிப்படையில் முன் கூட்டிய ஒப்பந்தம் செய்து கொள்வதில்லை. அவ்வப்போது அல்லது குறுகிய கால அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன. இதனால், டாலர் மதிப்பு உயரும் போது, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றன.

பாதாம்: இதன்படி, அமெரிக்காவிலிருந்து, பாதாம் இறக்குமதி செய்வோர் அதிகளவில் இழப்பை சந்தித்துள்ளனர். இவர்கள், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு 55 ரூபாயை எட்டும்பட்சத்தில், இறக்குமதியை உடனடியாக நிறுத்திக் கொள்வர் என, யு.எஸ்.டீ.ஏ தெரிவித்துள்ளது.ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், மஞ்சள் பட்டாணி, பச்சைப் பட்டாணி, அவரை உள்ளிட்ட பருப்பு வகைகளின் இறக்குமதி குறைந்து போயுள்ளது. இதனால், இவற்றின் விலை 5 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல், தாவர எண்ணெய் இறக்குமதியும் குறைந்துள்ளது.
அரிசி :அதேசமயம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், அரிசி,சோளம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியாளர்கள் அதிக லாபம் ஈட்டியுள்ளனர். செப்டம்பர் முதல் டிசம்பர் 15ம் தேதி வரையிலான காலத்தில், 20 லட்சம் டன் பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 50 சதவீதம் ஏற்கனவே ஏற்றுமதி செய்யப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இதே காலத்தில், 9 லட்சம் டன் என்ற அளவிற்கு சோளம் ஏற்றுமதிக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு, இதே காலத்தில், 6 லட்சம் டன்னாக குறைந்து காணப்பட்டது.
சோளம்:ரூபாய் வெளிமதிப்பின் வீழ்ச்சி நீடிக்கும்பட்சத்தில், நடப்பு 2011-12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், சோளம் ஏற்றுமதி, 30 லட்சம் டன்னை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது,கடந்த 2010-11ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், 28 லட்சம் டன் என்ற அளவில் குறைந்திருந்தது என யு.எஸ்.டீ.ஏ அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)