பதிவு செய்த நாள்
05 ஜன2012
09:26
சென்னை : வருமான வரி பிடித்தம் செய்வதில், தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது என, சென்னை வருமான வரி அலுவலக கமிஷனர் சங்கரன் தெரிவித்தார். ஆண்டிற்கு குறைந்தபட்சம், 1.80 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் ஆண்களும், 1.90 லட்ச ரூபாய் சம்பாதிக்கும் பெண்களும், வருமான வரி வரம்பிற்குள் வருகின்றனர். பணியாளர்களுக்கான வருமான வரியை, சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து நேரடியாக பிடித்தம் செய்யும், "டி.டி.எஸ்.,' முறையை செயல்படுத்த, தனி அதிகாரிகள் (டி.டி.ஓ.,) உள்ளனர். இவர்களுக்கு, மின்னணு முறையில் வருமான வரி கணக்கைப் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் களைவது உள்ளிட்டவை குறித்த, மூன்று நாள் பயிலரங்கம், சென்னை நுங்கம்பாக்கம், வருமான வரி அலுவலக வளாகத்தில் நேற்று துவங்கியது.
அப்போது, நிருபர்களை சந்தித்த, சென்னை வருமான வரி அலுவலக கமிஷனர் (டி.டி.எஸ்.,), சங்கரன் கூறும்போது, ""வருமான வரி பிடித்தத்தில், 40 சதவீதம் டி.டி.எஸ்., முறையில் பெறப்படுகிறது. இந்த ஆண்டு, தமிழகத்தின் வருமான வரி வசூல் இலக்கு, 38 ஆயிரத்து, 816 கோடி ரூபாய்,'' என்றார். மேலும், "" ஜன., 2ம் தேதி வரை பிடித்தம் செய்யப்பட்டுள்ள, 23 ஆயிரத்து, 53 கோடி ரூபாயில்; 10 ஆயிரத்து, 154 கோடி ரூபாய், டி.டி.எஸ்., முறையில் பெறப்பட்டுள்ளது. வருமான வரி பிடித்தம் செய்வதில், தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. முதல் மூன்று இடங்களில், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டில்லி மாநிலங்கள் உள்ளன,'' எனக் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|