பதிவு செய்த நாள்
05 ஜன2012
15:30
புதுடில்லி: புத்தாண்டின் முதல் உணவுப்பணவீக்க அறிக்கையை இன்று மத்திய அரசு வெளியிட்டது. இதில், கடந்த வாரத்திற்கான உணவுப்பணவீக்கம் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிவடைந்துள்ளது. டிசம்பர் 24வுடன் முடிவடைந்த வாரத்தின் நாட்டின் உணவுப்பணவீக்கம் -3.36 சதவீதமாக உள்ளது. இது கடுந்த 6 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடுமையான பணவீக்க சதவீதமாகும். இது நாட்டின் வளர்ச்சியை காட்டுவதாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலைகள் கடுமையாக குறைந்ததால் உணவுப்பணவீக்கம் -3.36 சதவீதம் என்று மைனஸ் அளவுக்குக் குறைந்தது.இதற்கு முந்தைய வாரத்தில் உணவுப்பணவீக்கம் +0.42% இருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளாக இரட்டை இலக்கத்தில் இருந்து கவலை அளித்து வந்த உணவுப்பணவீக்க விகிதம் கடந்த ஒன்றரை மாதங்களில் சரிந்தபடியே இருந்து வந்தது. முதன் முதலாக தற்போது உணவுப் பணவாட்டமாக மாறியுள்ளது. இருப்பினும் மொத்த விற்பனை விலைகள் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் ஒட்டுமொத்த பணவீக்கம் 9.11%ஆக இருந்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|