சிறு சேமிப்பு வட்டியில் மாற்றமில்லைசிறு சேமிப்பு வட்டியில் மாற்றமில்லை ... ஏப்ரல் முதல் டிசம்பர் வரைநேரடி வரி வசூல் ரூ.3.96 லட்சம் கோடியாக உயர்வு ஏப்ரல் முதல் டிசம்பர் வரைநேரடி வரி வசூல் ரூ.3.96 லட்சம் கோடியாக உயர்வு ...
புண்ணாக்கு ஏற்றுமதி 38 லட்சம் டன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2012
00:38

கோல்கட்டா:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், புண்ணாக்கு ஏற்றுமதி, 38 லட்சத்து 68 ஆயிரத்து 831 டன்னாக அதிகரித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 23 சதவீதம் (31 லட்சத்து 47 ஆயிரத்து 512 டன்) அதிகமாகும்.சென்ற டிசம்பர் மாதத்தில், 9 லட்சத்து 53 ஆயிரத்து 526 டன் புண்ணாக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 7 லட்சத்து 65 ஆயிரத்து 954 டன்னாக இருந்தது.
கரீப் பருவத்தில் சோயா உற்பத்தி அதிகரிப்பு, பிழி திறன் உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி ஆகியவற்றால், புண்ணாக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், 9 லட்சத்து 8 ஆயிரத்து 809 டன் சோயா புண்ணாக்கு, 29 ஆயிரத்து 508 டன் கடுகு புண்ணாக்கு உட்பட மொத்தம், 9 லட்சத்து 38 ஆயிரத்து 317 டன் புண்ணாக்கு, ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில், 8 லட்சத்து 49 ஆயிரத்து 370 டன்னாக இருந்தது.
வியட்நாம் நாட்டிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 5 லட்சத்து 42 ஆயிரத்து 676 டன்னிலிருந்து, 7 லட்சத்து 472 டன்னாக அதிகரித்துள்ளது. இதில், 5 லட்சத்து 38 ஆயிரத்து 602 டன் சோயா புண்ணாக்கும், 36 ஆயிரத்து 245 டன் கடுகு புண்ணாக்கும், 1 லட்சத்து 25 ஆயிரத்து 625 டன் தவிட்டு புண்ணாக்கும் அடங்கும்.தென் கொரியாவிற்கான புண்ணாக்கு ஏற்றுமதி, 3 லட்சத்து 60 ஆயிரத்து 172 டன்னிலிருந்து, 5 லட்சத்து 53 ஆயிரத்து 795 டன்னாக அதிகரித்துள்ளது. இதில், 2 லட்சத்து 93 ஆயிரத்து 276 டன் கடுகு புண்ணாக்கு, 2 லட்சத்து 30 ஆயிரத்து 673 டன் ஆமணக்கு புண்ணாக்கு, 29 ஆயிரத்து 846 டன் சோயா புண்ணாக்கு ஆகும்.
ஐரோப்பா மற்றும் இதர நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட புண்ணாக்கு இறக்குமதி, 1 லட்சத்து 40 ஆயிரத்து 83 டன்னிலிருந்து, 1 லட்சத்து 70 ஆயிரத்து 863 டன்னாக அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்ட புண்ணாக்கு ஏற்றுமதி, 2 லட்சத்து 58 ஆயிரத்து 65 டன்னிலிருந்து, 4 லட்சத்து 37 ஆயிரத்து 151 டன்னாக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)