ஏப்ரல் முதல் டிசம்பர் வரைநேரடி வரி வசூல் ரூ.3.96 லட்சம் கோடியாக உயர்வுஏப்ரல் முதல் டிசம்பர் வரைநேரடி வரி வசூல் ரூ.3.96 லட்சம் கோடியாக உயர்வு ... இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு இந்திய ரூபாயின் மதிப்பில் உயர்வு ...
சர்வதேச நிதி நகரம் "கிப்ட்'குஜராத்தை பின்பற்றுமா தமிழகம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2012
00:43

ஆமதாபாத்:தொழில் துறையில் வேகமாக முன்னேறி வரும் குஜராத், இந்தியாவில் முதன் முறையாக, முன்னோடி தொழில்நுட்ப வசதிகள் கொண்ட நிதி துறைக்கான சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்கிறது.காந்தி நகர் அருகே, 3.58 சதுர கி.மீ பரப்பளவில் குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரம் (கிப்ட்) என்ற இந்த "மெகா' மண்டலத்தை உருவாக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. 78 ஆயிரம் கோடி ரூபாய் திட்டச் செலவில் மேற்கொள்ளப்படும் இந்த மண்டலத்தின் முதற்கட்டப் பணி, மூன்றரை ஆண்டுகளில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது, நாட்டிலேயே தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, சுற்றுச்சூழல், கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல பிரிவுகளில், இந்த நகரம் முன்னோடியாகத் திகழும். இங்குள்ள கட்டடங்கள், குளிர் சாதன வசதிக்கு பதிலாக, புதுமையான தொழில்நுட்பத்தில் குளிர்ந்த நீரோட்டம் மூலம் குளிர்விக்கப்படும். இதன்மூலம், குளிர் சாதனங்களுக்கு ஆகும் மின்சாரத்தில் 90 சதவீதம் சேமிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
"கிப்ட்' நகரில் உள்ள அனைத்து கட்டங்களுக்கும், பொதுவான கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, தானியங்கி முறையில் மின் இழப்பு குறைக்கப்படும், தேவைக்கேற்ப மின்சாரம் வினியோகிக்கப்படும். ஒவ்வொரு கட்டடத்திலும் சேகரிக்கப்படும் கழிவுப் பொருட்கள், இயந்திரங்கள் மூலம் அதிவேகமாக உறிஞ்சப்பட்டு, குழாய்கள் மூலம் , 20 கி.மீ. தொலைவில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
தானியங்கி முறையில் நடைபெறும் இந்த செயல்பாடுகள் மூலம், பணியாளர், போக்குவரத்து உள்ளிட்ட செலவுகள் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய தொழில்நுட்பம், லண்டன், மான்ட்ரியல், ஸ்டாக்ஹோம் மற்றும் பார்சிலோனா நகரங்களில் பயன்பாட்டில் உள்ளது.இத்துடன், மேலும் பல அதிநவீன வசதிகளைக் கொண்டதாக 'கிப்ட்' உருவாக உள்ளது. இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்க உறுதி பூண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, "கிப்ட்' போன்ற "மெகா' நகரை உருவாக்குவாரா?

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)