பதிவு செய்த நாள்
06 ஜன2012
00:44
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், தொடர்ந்து மூன்றாவது நாளாக, வியாழனன்றும் மோசமாகவே இருந்தது.டாலர் மதிப்பு உயர்வாலும், லாப நோக்கம் கருதியும் அதிக அளவில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் வர்த்தகம் சுணக்கம் கண்டது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட், வங்கி, மருந்து போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் சாதனங்கள், உருக்கு, எண்ணெய் மற்றும் எரிவாயு தொலைத்தொடர்பு உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 25.56 புள்ளிகள் சரிவடைந்து, 15,857.08 புள்ளிகள் நிலைபெற்றது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 15,980.17 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,809.31 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 17 நிறுவன பங்குகளின் விலை குறைந்தும், 13 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தது.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 0.30 புள்ளிகள் உயர்ந்து, 4,749.95 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,730.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,531.15 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|