பதிவு செய்த நாள்
07 ஜன2012
00:29
கோல்கட்டா:நடப்பு நிதியாண்டில், பட்டுத் துணி ஏற்றுமதி, 20 முதல் 25 சதவீதம் வரை குறையும் என, இந்திய பட்டு கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது. இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் விக்ரம் டான்டிகா கூறியதாவது:சர்வதேச சந்தையில் பட்டு நூலிழை விலை, 100 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்ததையடுத்து, பட்டுத் துணி ஏற்றுமதி குறைந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக, அளவின் அடிப்படையில் இதன் ஏற்றுமதி, 50 சதவீதத்திற்கும் மேலாக சரிவடைந்துள்ளது.
இந்தியாவின் மொத்த பட்டு நூலிழை இறக்குமதியில், சீனாவின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது. நடப்பு 2011-12ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், நாட்டின் பட்டுத் துணி ஏற்றுமதி, மதிப்பு மற்றும் அளவின் அடிப்படையில், 35 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, 20 சதவீதம் வரை வீழ்ச்சிகண்டுள்ளது, ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான அம்சமாக உள்ளது.கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பரில், ஒரு கிலோ பட்டு நூலிழையின் விலை, 25 டாலராக இருந்தது. இது, சென்ற ஆண்டின் இதே காலத்தில், 58 டாலராக அதிகரித்திருந்தது.இந்தியா, கடந்த 2010-11ம் முழு நிதியாண்டில், 56 கோடி டாலர் (2,800 கோடி ரூபாய்) மதிப்பிற்கு, பட்டுத் துணி வகைகளை ஏற்றுமதி செய்துள்ளது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|