பதிவு செய்த நாள்
07 ஜன2012
00:30
மும்பை:சென்ற டிசம்பர் மாதத்தில், ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த அல்ட்ரா டெக் நிறுவனத்தின், சிமென்ட் உற்பத்தி, 37.70 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய 2010ம் ஆண்டின் இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை விட, 10.8 சதவீதம் அதிகமாகும்.இதே மாதங்களில், ஏ.சி.சி., நிறுவனத்தின் சிமென்ட் உற்பத்தி, 6.28 சதவீதம் உயர்ந்து, 20 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. அம்புஜா சிமென்ட் நிறுவனத்தின் உற்பத்தி, 6.81 சதவீதம் அதிகரித்து, 10.91 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.இதே மாதங்களில், அல்ட்ரா டெக் நிறுவனத்தின் விற்பனை, 10.5 சதவீதம் வளர்ச்சியடைந்து, 36 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
ஏ.சி.சி., மற்றும் அம்புஜா நிறுவனங்களின் சிமென்ட் விற்பனை முறையே, 8.85 சதவீதம் மற்றும் 5.75 சதவீதம் வளர்ச்சி கண்டு, 20 லட்சம் டன் மற்றும் 18 லட்சம் டன் என்ற அளவில் அதிகரித்துள்ளது.சென்ற 2011ம் காலண்டர் ஆண்டில், ஏ.சி.சி. நிறுவனம், 2.36 கோடி டன் சிமென்ட்டை உற்பத்தி செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டில், 2.12 கோடி டன்னாக இருந்தது. அம்புஜா நிறுவனத்தின் சிமென்ட் உற்பத்தி, 2 கோடி டன்னிலிருந்து, 2.10 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|