பதிவு செய்த நாள்
07 ஜன2012
00:37
தேங்காய் உற்பத்தி உயர்ந்துள்ளதால், தேங்காய்எண்ணெய் விலை, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, வீழ்ச்சி கண்டுள்ளது. கொச்சி மொத்த விற்பனை சந்தையில், ஒரு குவிண்டால், 10 ஆயிரத்து, 400 ரூபாய்க்கு விற்பனையான தேங்காய்எண்ணெய், தற்போது, 7,650 ரூபாயாக குறைந்துள்ளது.பொதுவாக, ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், தேங்காய் அதிக அளவில் உற்பத்தியாகும். கேரளா, தேங்காய் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இங்கு, 7 லட்சத்து, 90 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னை மரம் பயிரிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஆண்டுக்கு சராசரியாக, 600 கோடி தேங்காய்கள் உற்பத்தியாகின்றன. இளநீர், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளதால், விவசாயிகள், தேங்காய்உற்பத்தியில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், நடப்பாண்டில் தேங்காய் உற்பத்தி, 10 சதவீதம் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பாண்டில், தமிழகத்தில், தென்னை சாகுபடி பரப்பளவு, 3 லட்சத்து, 67 ஆயிரம் ஹெக்டேரிலிருந்து, 3 லட்சத்து, 90 ஆயிரம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இதையடுத்து, 600 கோடி தேங்காய் உற்பத்தியாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் தேங்காய்விளைச்சல் உயர்ந்துள்ளது.தமிழகத்தில், ஒரு ஹெக்டேருக்கு, 13 ஆயிரத்து, 771 தேங்காய்கள் உற்பத்தியாகின்றன. இது, ஆந்திராவில், 9 ஆயிரத்து, 327 ஆகவும் உள்ளது. கேரளாவில் அதிக பரப்பளவில் தென்னை மரங்கள் உள்ளபோதிலும், ஒரு ஹெக்டேரில் விளையும் தேங்காய்களைப் பொருத்தவரை, தமிழகம் முதலிடத்தில் உள்ளது.கேரளாவில், 7 லட்சத்து, 90 ஆயிரம் ஹெக்டேரில் தென்னை மரங்கள் உள்ளன. இங்கு, ஒரு ஹெக்டேரில் 7 ஆயிரத்து, 365 தேங்காய்மட்டுமே விளைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|