"தானே' புயலால் தென்னங்கீற்று வியாபாரிகளுக்கு யோகம் "தானே' புயலால் தென்னங்கீற்று வியாபாரிகளுக்கு யோகம் ... சபரிமலை வருமானம் ரூ. 20 கோடி அதிகரிப்பு சபரிமலை வருமானம் ரூ. 20 கோடி அதிகரிப்பு ...
அமெரிக்க டாலர் மதிப்பின் தாக்கத்தால்தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2012
00:39

தங்கம் விலை உயர்ந்துள்ளதால், சென்ற 2011ம் காலண்டர் ஆண்டில், அக்.,- டிச., வரையிலான நான்காம் காலாண்டில், அதன் இறக்குமதி 60 சதவீதம் சரிவடைந்து 125 டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய 2010ம் ஆண்டின் இதே காலத்தில் தங்கம் இறக்குமதி 291 டன் என்ற அளவிற்கு உயர்ந்திருந்தது.
பங்குச் சந்தை:இந்தியா, கடந்த 2010ம் ஆண்டு 969 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இது, சென்ற 2011ம் ஆண்டில் மேலும் அதிகரித்து 1,000 டன்னாக உயரும் என உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டிருந்தது.
அதற்கேற்ப, சென்ற ஆண்டின் தொடக்கத்தில் உள்நாட்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் கடன் பிரச்சனை போன்றவற்றால், தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்தது. தங்கத்திற்கான தேவை பெருகியதால், அதன் இறக்குமதி உயர்ந்தது.இந்நிலையில், சென்ற ஆண்டு ஜூலை முதல், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளிமதிப்பு சரிவடையத் தொடங்கியது. டிசம்பர் வரையிலான காலத்தில், ரூபாயின் வெளி மதிப்பு 20 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு, முன்பை விட, கூடுதல் தொகையை வழங்க வேண்டியிருந்ததால் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டனர்.
உச்சம்:அதே சமயம், உள்நாட்டில் தங்கம் விலை உச்சத்தை எட்டியதால், அதற்கான தேவையும் குறைந்தது. இத்தகைய காரணங்களால், தங்கம் இறக்குமதி செய்வதை வர்த்தகர்கள் குறைத்துக் கொண்டனர்.இதனால், சென்ற காலண்டர் ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரை அதிகரித்திருந்த தங்கத்தின் இறக்குமதி, ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் சரிவடைந்துள்ளது. டிசம்பர் வரையிலான காலாண்டில், 125 டன் என்ற அளவிற்கே தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு இத்தகைய சரிவு ஏற்பட்டுள்ளதாக இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.
சென்ற 2011ம் ஆண்டு, செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், நாட்டின் தங்கம் இறக்குமதி 753 டன்னாக இருந்தது. செப்டம்பர் வரையிலான காலாண்டில், 200 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், டிசம்பர் வரையிலான காலாண்டில், தங்கம் இறக்குமதி, முந்தைய 2010ம் ஆண்டின் இதே காலத்தை விட 8 சதவீதம் குறைந்திருக்கும் என உலக தங்க கவுன்சில் மதிப்பிட்டுள்ளது.சர்வதேச சந்தை:சென்ற ஆண்டின், முதல் அரையாண்டில் 2,500 கோடி டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது, செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் 1,125 கோடி டாலராக குறைந்துள்ளது.
டிசம்பர் வரையிலான இறுதி காலாண்டில், தங்கம் இறக்குமதி மதிப்பு 700-800 கோடி டாலர் என்ற அளவிற்கே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டில், தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், சர்வதேச சந்தையில், அதன் விலை கடந்த நான்கு மாதங்களாக குறைந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,900 டாலரில் இருந்து 1,615 டாலராக சரிவடைந்துள்ளது. ஆனால், ரூபாயின் வெளி மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் இறக்குமதியாளர்கள் உள்ளனர்.பொருளாதார வளர்ச்சி:தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது, உள்நாட்டு சந்தைக்கு பாதகமான அம்சம் என்ற போதிலும், அது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கிரிசில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரதீப் ஷா கூறும்போது, "மத்திய அரசு, தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 10 சதவீதமாக உயர்த்த வேண்டும். இதனால், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, நடப்பு கணக்கு பற்றாக்குறை ஆகியவை குறையும்' என்று தெரிவித்தார்.இத்தகைய நடவடிக்கை மூலம், ரூபாயின் வெளிமதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை தடுத்து நிறுத்தலாம். இதன் தாக்கத்தால், நாட்டின் பணவீக்கம் குறையும். நிதிப் பற்றாக்குறை மற்றும் கடன் ஆகியவையும் கட்டுக்குள் வரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)