பதிவு செய்த நாள்
07 ஜன2012
00:41
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வெள்ளியன்று ஓரளவிற்கு சுமாராக இருந்தது. இத்தாலி, ஹங்கேரி நாடுகளின், நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ளதாக வெளியான தகவலால், ஆசிய பங்குச் சந்தைகளில் சரிவு காணப்பட்டது. அதேசமயம், அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதாக வந்த செய்தியால், ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.நேற்றைய பங்கு வியாபாரத்தில், வங்கி, ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், உருக்கு போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகள் அதிக விலைக்கு கைமாறின. தொலைத் தொடர்பு, எண்ணெய், மருந்து, பொறியியல் நிறுவன பங்குகளுக்கு வரவேற்பு குறைவாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 10.65 புள்ளிகள் அதிகரித்து, 15,867.73 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,001.31 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 15,664.91 புள்ளிகள் வரையிலும் சென்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 4.15 புள்ளிகள் உயர்ந்து, 4,754.10 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 4,794.90 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,686.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|