பதிவு செய்த நாள்
07 ஜன2012
10:35
ப்ரீ பெய்டு செல்போன் வாடிக்கையாளர்களின் வசதியை முன்னிட்டு அவர்களது அழைப்புகளுக்கான கட்டணம் குறித்த முழு விவரங்களையும் செல்போன் சேவை நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (டிராய்) உத்தரவிட்டுள்ளது. இந்த `பில்'லை பெறுவதற்காக வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படுவதை போல் அழைக்கப்பட்ட எண்கள், அழைக்கப்பட்ட நேரம், அழைப்பின் கால அளவு மற்றும் பயனீட்டு கட்டணங்கள் குறித்த தகவல்கள் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களும் இனி மேல் பெறும் வகையில் டிராயின் இந்த உத்தரவு அமைந்துள்ளது. இந்த சேவையை பெற விரும்பும் செல்போன் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளின் பேரில், செல்போன் சேவை நிறுவனங்கள் ரூ.50க்கு மிகாத கட்டண அடிப்படையில் 30 நாட்களுக்குள் இந்த தகவல்களை வழங்க வேண்டும் என ட்ராய் தெரிவித்துள்ளது. நாட்டின் செல்போன் பயனீட்டாளர்களில் 96 சதவீதம் பேர் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|