பதிவு செய்த நாள்
08 ஜன2012
06:17
சென்னை : பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டின் டை-இசி ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம், ஸ்டார் யூனியன் டை-இசி லைப் இன்சூரன்ஸ் ஆயுள் காப்பீட்டு துறையைச் சேர்ந்த இந்நிறுவனம், "தன் சுரக்ஷா பிளாட்டினம்' என்ற புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து இந்நிறுவனத்தின் துணை தலைமை செயல் அதிகாரி நகமுரா கூறியதாவது: குறைந்தபட்ச முதலீடாக, ஒரு லட்சம் ரூபாய் பிரிமியம் கொண்ட, "தன் சுரக்ஷா பிளாட்டினம்' காப்பீட்டு திட்டத்தில், ஒரே முறை முதலீடு செய்தால் போதும். 10 ஆண்டுகளுக்கு பிறகு, முதலீட்டு தொகை மற்றும் போனஸ் தொகை வழங்கப்படும். காப்பீட்டுதாரர், எதிர்பாராதவிதமாக இறக்க நேரிட்டால், செலுத்திய பிரிமியம் தொகைக்கு ஏற்ப, ஐந்து மடங்கு கூடுதல் தொகை வழங்கப்படும்.
புதிய காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், 500 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு, வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி சலுகைகள் வழங்கப்படும். மேலும், இந்த காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி, வரும் மார்ச் 31ம் தேதியாகும். இவ்வாறு நகமுரா கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|