பதிவு செய்த நாள்
08 ஜன2012
06:20
புதுடில்லி : முக்கிய பொருட்கள் இறக்குமதி, ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான எட்டு மாத காலத்தில், 57 ஆயிரத்து 399 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே கால இறக்குமதியுடன் ஒப்பிடுகையில், 41.8 சதவீதம் அதிகமாகும்.
மதிப்பீட்டு காலத்தில், உணவு எண்ணெய் இறக்குமதி, 67.6 சதவீதம் உயர்ந்து, 26 ஆயிரத்து 622 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில், கச்சா பாமாயில் இறக்குமதி வெகுவாக உயர்ந்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதி முறையே, 68.3 சதவீதம் மற்றும் 62.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு காலத்தில், மோட்டார் வாகனம், பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், ரப்பர், பருத்தி மற்றும் பட்டு, நறுமணப் பொருட்கள், மார்பிள், கிரானைட், மதுபானங்கள், தேயிலை மற்றும் காபி ஆகியவற்றின் இறக்குமதியும் உயர்ந்துள்ளது. அதேசமயம், பால் மற்றும் பால் பொருட்கள், உணவு தானியங்கள் ஆகியவற்றின் இறக்குமதி குறைந்துள்ளது.
இந்தோனேஷியா, சீனா, மலேசியா, அர்ஜென்டினா, ஜெர்மனி, கொரியா, அமெரிக்கா, உக்ரைன், கனடா, ஜப்பான், தாய்லாந்து, கானா, பெனின், இங்கிலாந்து போன்ற நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதி அதிகரித்துள்ளது. அதேசமயம், மியான்மர், பிரேசில் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து செய்து கொள்ளப்படும் இறக்குமதி குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|