முக்கிய பொருட்கள் இறக்குமதி 42 சதவீதம் உயர்வுமுக்கிய பொருட்கள் இறக்குமதி 42 சதவீதம் உயர்வு ... 30 சதவீதம் வரை விலையை குறைக்கிறது ஜி-5 மொபைல் நிறுவனம்! 30 சதவீதம் வரை விலையை குறைக்கிறது ஜி-5 மொபைல் நிறுவனம்! ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சர்க்கரை உற்பத்தி 17 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜன
2012
06:20

புதுடில்லி : நடப்பு 2011-12ம் பருவத்தின், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான முதல் மூன்று மாத காலத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி 17 சதவீதம் அதிகரித்துள்ளது. உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இதன் உற்பத்தி அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணம்.
டிசம்பர் வரையிலான மூன்று மாத காலத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி 75 லட்சத்து 70 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போதைய உற்பத்தி 11 லட்சம் டன் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நடப்பு 2011-12ம் பருவத்தில், சர்க்கரை உற்பத்தி 2.60 கோடி டன்னாக இருக்கும் என, இந்திய சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (ஐ.எஸ்.எம்.ஏ) மதிப்பிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில், சர்க்கரை உற்பத்தி 5 லட்சம் டன் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 50 சதவீதம் அதிகம். ஆலைகளுக்கு, முன்கூட்டியே கரும்பு வரத்து அதிகரித்ததால், டிசம்பர் வரையிலுமாக, உத்தரபிரதேசத்தில், 2.61 கோடி டன் கரும்பு அரைக்கப்பட்டுள்ளது.
இது, கடந்த ஆண்டில் 1.97 கோடி டன்னாக இருந்தது. ஆனால், கடந்தாண்டு பிழிதிறன் 8.81 சதவீதமாக இருந்தது. இது, இவ்வாண்டில், 8.45 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், 490 ஆலைகள் கரும்பு அரவையில் ஈடுபட்டன. இது, நடப்பாண்டு இதே மாதத்தில், 503 ஆக அதிகரித்துள்ளது.
இதே காலத்தில், மகாராஷ்டிராவில், சர்க்கரை உற்பத்தி 3 லட்சம் டன் என்ற அளவில் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. இம்மாநிலத்தின் கரும்பு அரவை 15 சதவீதம் அதிகரித்து, 2.31 கோடி டன் என்ற அளவிலிருந்து, 2.66 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. மேலும், கரும்பின் பிழிதிறன் 9.8 சதவீதத்திலிருந்து, 10.35 சதவீதமாக அதிகரித்துள்ளது. இம்மாநிலங்கள் மட்டுமின்றி, கர்நாடகாவிலும் சர்க்கரை உற்பத்தி 2 லட்சம் டன் என்ற அளவில் அதிகரித்துள்ளது என, ஐ.எஸ்.எம்.ஏ. மேலும் தெரிவித்துள்ளது.
ஐ.எஸ்.எம்.ஏ., கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து, செயற்கைகோள் துணையுடன் கரும்பு பயிரிடும் பரப்பளவு பற்றிய இரண்டாவது மதிப்பீட்டை வரும் பிப்ரவரி மாதத்தில் மேற்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)