பதிவு செய்த நாள்
09 ஜன2012
00:03
சென்னை: மருத்துவ காப்பீட்டு சேவையில் ஈடுபட்டு வரும் ஸ்டார் ஹெல்த் அண்டு அலைடு இன்சூரன்ஸ் நிறுவனம், குடும்ப நலத்திற்கான பாலிசியில் மேலும் பல வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் வி.ஜெகன்நாதன் கூறியதாவது:எங்களின் மருத்துவ காப்பீட்டு திட்டங்களில், கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்துள்ளோம். குறிப்பாக, கடந்த 2007ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட "பேமிலி ஹெல்த் ஆப்டிமா' என்ற திட்டத்தில், ஒரே ஒரு முறை பிரிமியம் செலுத்துவது சிறப்பம்சமாக உள்ளது. இப்போது, இப்பாலிசியை மேலும் மெருகூட்டும் வகையில் சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.இத்திட்டத்தின் கீழ், தற்போது, 3 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு செய்திருந்து, அந்த தொகை முழுவதுமாக, பயன்படுத்தப்பட்டு விட்டாலும் கூட, மேலும், 1.50 லட்சம் ரூபாய்க்கு புதிய நோய்களுக்கு காப்பீடு பெறலாம். ஏற்கனவே, பாலிசி எடுத்துள்ளோர், இதுவரை காப்பீடு பெறாத நிலையில், இந்த புதிய வசதியை பெறலாம். நகரத்தை பொறுத்து, நோயாளிகளுக்கான படுக்கை வசதி கட்டணமும், 1,000 முதல் 5,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், நிறுவனத்தின் பிரிமிய வருவாய், 840 கோடி ரூபாயாக இருந்தது. இது, நடப்பு நிதியாண்டின் முடிவில், 1,200 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மதிப்பிட்டுள்ளோம். இவ்வாறு ஜெகன்நாதன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|