பதிவு செய்த நாள்
09 ஜன2012
00:04
புவனேஸ்வர்ந: உலகளவில் பொருளாதார வளர்ச்சியில், அடுத்த 20 ஆண்டுகளில், இந்தியா மூன்றாவது மிகப் பெரிய நாடாக திகழும் என, மத்திய திட்டக் குழுத் துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்தார்.இந்தியா, குறுகிய காலத்தில், பல துறைகளில் சிறப்பாக வளர்ச்சி பெற்றுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக, நாட்டின் வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலிருந்து, மீள்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் துரித கதியில் மேற்கொள்ளப்படுகிறது.அடுத்த 20 ஆண்டுகளில், உலக பொருளாதாரத்தில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவை, இரண்டாவது இடத்திற்கு தள்ளி, முதல் இடத்தை சீனா கைப்பற்றும். அப்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 9 சதவீத வளர்ச்சியடைந்து, இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறும். இதே காலத்தில், நாட்டில் தனி நபர் வருமானம், 7 - 8 சதவீதம் வரை அதிகரிக்கும் என அலுவாலியா மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|