பதிவு செய்த நாள்
09 ஜன2012
00:05
தேனி: உளுந்து, தட்டைப்பயறு, பாசிப்பயறு, துவரை, மொச்சை, பட்டாணி, பச்சை கடலை, கொள்ளு உட்பட அனைத்து வகை பயறு வகைகளின் உற்பத்தியை பெருக்குவதற்கு, அரசு முதல் முறையாக மானியம் அறிவித்துள்ளது.2,500 மழைநீர் தூவுவான் வாங்கி விவசாயிகளுக்கு, இலவசமாக வழங்குவதற்கு, 6 கோடியே 23 லட்சத்து 5,000 ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. 2,500 நடமாடும் தெளிப்பு நீர்பாசன கருவிகள் வாங்குவதற்கு, 4 கோடியே 24 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. தவிர பயறு உற்பத்தி பெருக்கு திட்டத்தில், பயறு வகை விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, கிலோவிற்கு, 15 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.இந்த விதைகளை வாங்கும் விவசாயிகளுக்கு, கிலோவிற்கு, 8 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மானிய உதவிகளை பெற விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகலாம்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|