பதிவு செய்த நாள்
09 ஜன2012
00:06
குன்னூர்: குன்னூர் தேயிலை ஏல மைய வர்த்தகத்தில், கடந்தாண்டு, 28.46 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.குன்னூர் கோத்தாரி வேளாண்மை மேலாண்மை மையத்தில் நடந்த கருத்தரங்கில், சர்வதேச நிர்வாக இயல் ஆலோசகர் சுந்தர் பேசியதாவது:நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூள், வாரந்தோறும் குன்னூர் தேயிலை ஏல மையம் மூலம் விற்கப்படுகிறது. 2010, 2011ம் ஆண்டுகளின் முறையே, 51 ஏலங்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்தாண்டின் துவக்கம் முதல் ஜூன் மாதம் வரை, தேயிலை வர்த்தகத்தில் ஏறுமுகம் தென்பட்டது; ஜூன் மாதத்துக்கு பின், ஏற்றுமதி வர்த்தகத்தில், பாதிப்பு ஏற்பட்டாலும், வர்த்தக வருமானத்தில், பெரியளவு பாதிப்பு ஏற்படவில்லை.கடந்தாண்டு மொத்தம், 5.27 கோடி கிலோ தேயிலை தூள் விற்கப்பட்டுள்ளது; சராசரி விலை கிலோவுக்கு, 63.38 ரூபாயாக இருந்தது. முந்தைய ஆண்டு, ஐந்து கோடி கிலோ தூள் விற்கப்பட்டு, சராசரி விலையாக கிலோவுக்கு, 61.11 ரூபாய் பெறப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டு 305.51 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்ட நிலையில், கடந்தாண்டு 334.01 கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டு, முந்தைய ஆண்டை விட, 28.46 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது; இது, 9.31 சதவீத வளர்ச்சி.ஏற்றுமதி வர்த்தகத்துக்கான ஆர்தோடக்ஸ் ரக விற்பனையில், 2010ம் ஆண்டு 29.69 லட்சம் கிலோ விற்கப்பட்டது; சராசரி விலை கிலோவுக்கு, 73.85 ரூபாய் கிடைத்தது. கடந்தாண்டு, 34.43 லட்சம் கிலோ விற்கப்பட்டு, சராசரி விலையாக, 76.95 ரூபாய் பெறப்பட்டுள்ளது. சி.டி.சி., ரகத்தில், 2010ல், 4.70 கோடி கிலோ தேயிலை தூள் விற்கப்பட்டு, சராசரி விலையாக, 60.30 ரூபாயும், கடந்தாண்டு 4.93 கோடி கிலோ தேயிலை தூள் விற்கப்பட்டு, சராசரி விலையாக, 62.43 ரூபாயும் பெறப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|